districts

img

சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் போராட்டத்தால் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்

திருவள்ளூர், ஜூலை 12-   

     கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்முனுசாமி, சாந்தி தம்பதியர்.

      குறவன் இனத்தை சேர்ந்த இவர்கள் கூடை முடைவது, கழிவறைகள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதார ரீதியாக சமூக  ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள குறவன் இனத்தை சேர்ந்த இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரு வருக்கும்  திருமணம் ஆகிவிட்டது. மகன் சந்துரு (வயது 14), ஆத்துப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார்.

      இறுதி தேர்வில் தேர்ச்சியடையவில்லை. பின்னர் தேர்ச்சியடையாத பாடத்தை மட்டும் மீண்டும் மறுதேர்வு  எழுதியுள்ளார். மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்  மற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் காண்பித் துள்ளார். ஆனால் சந்துருவுக்கு மட்டும் காண்பிக்க மறுத்துள்ளனர். எந்த ஆதரவும் இல்லாததால்,  அங்கிருந்து மாற்று சான்றிதழ் வாங்கிவிட்டார். அதில் எந்த சாதி என குறிப்பிடவில்லை. இதனால் மாணவன் இதுவரை அரசின் கல்வி உதவித் தொகை கூட பெறமுடிய வில்லை என பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

     இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கும்மிடிப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் பலமுறை முயற்சித்தும் தலைமை ஆசிரியர்  ஒப்புக் கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார்  தலையிட்டு, அரசு பள்ளியில் குறவன் இனத்தை சேர்ந்த ஏழை  மாணவர் சந்துருவை சேர்க்க வேண்டும் என புதனன்று  (ஜூலை 12), வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து  மீண்டும் 9 ஆம் வகுப்பில் மாணவனை சேர்த்துக்கொள்வ தாக தலைமை ஆசிரியர் இராமமூர்த்தி உறுதியளித்தார். மணவனை பள்ளியில் சேர்த்துக்கொண்ட பின்னர் தான்  தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். சிஐடியு நிர்வாகிகள்  குமார், வில்வாலிபாபு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 சாதி சான்றிதழ் வழங்க சிபிஎம் வேண்டுகோள்

     ஆத்துப்பாக்கத்தில் 40 கும் மேற்பட்ட குறவன் இன  குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். யாருக்கும் குறவன் இன சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு காத்திருக்கும் போராட்டம் மேற்கொண்ட பிறகும் வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் குறவன் இனத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்  கல்வி கற்க முடியாமல் அவதிபடுகின்றனர். அரசு கல்வி  உதவித் தொகை கூட பெறமுடியவில்லை. சாதி சான்றிதழ்  வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப் பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன்  வலியுறுத்தி யுள்ளார்.