districts

img

எண்ணூரில் போராடும் மக்களுக்கு ஆதரவாக சிபிஎம் பொதுக்கூட்டம்

சென்னை, பிப். 22- சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம்  தயாரிக்கும் தொழிற் சாலையில் இருந்து அமோ னியா வாயு கசிவு வெளி யேறியதில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆலையை நிரந்தர மாக மூட வலியுறுத்தி 56ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் புதனன்று (பிப். 21) நடை பெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். பகுதிக் குழு உறுப்பினர் சுரேஷ் வரவேற்றார். இதில் சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை கலந்து  கொண்டு சிறப்புரையாற்றி னார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ஆர்.ஜெய ராமன், எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் கதிர் வேல், மாவட்ட குழு உறுப் பினர்கள் ஆர்.கருணாநிதி,  செல்வகுமாரி, சமூக ஆர்வ லர் வீர.அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.