districts

img

எல்லையோர மதுபான கடைகளை அகற்றக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜன.23- புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மதுபான கொள்கைகளை கண்டித்தும், எல்லைப் பகுதியான பாகூரில் குவிந்துள்ள மதுபான கடைகளால் சீரழியும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க  மதுகடைகளை அகற்ற வேண்டும்.நவாத்தோப்பு, சித்தேரி, கரையம்புத்தூர், மணமேடு, முள்ளோடை பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைக்க வேண்டும். புதுச்சேரி எல்லையோரம் அமைந்துள்ள மதுபான கடைகளை அகற்றவேண்டும். புதிதாக மதுபான தொழிற்சாலைகள், மதுபான கடைகளை திறப்பதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் கலியன்,இளவரசி கமிட்டி உறுப்பினர்கள் பத்வாச்சலம், சேகர், வடிவேலு,  ஹரிதாஸ், கௌசிகன் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். பின்னர் பாகூர் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து  மதுக்கடைகளை அகற்றக்கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.