மக்கள் கோரிக்கை என்ன ?
கள்ளக்குறிச்சி, மார்ச் 17- கள்ளக்குறிச்சி, நகர் ரயில் நிலையத்தில் முதல் முறையாக சென்னை- கொல்லம் எக்ஸ்பிரஸ் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் மேளதாளங்க ளுடன் பயணிகளுக்கு மலர் தூவி இனிப்பு வழங்கி உற்சாகவர வேற்பளிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நீண்ட நெடிய போராட்டத் திற்கு பிறகு உளுந்தூர் பேட்டை ரயில் நிலையத்தில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமையன்று (மார்ச்17) முதல்முறையாக நின்று சென்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உளுந் தூர்பேட்டை ரயில் நிலை யத்தை ஆய்வு செய்தார். அதனடிப்படையில் அவர் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வலியுறுத்தி ரயில்வே துறைக்கு கடிதம் எழுதி னார். இதுதொடர்பாக வாலிபர் சங்கத்தினர் மக்க ளிடம் தொடர் பிரச்சாரத்தை பல்வேறு வடிவங்களில் நடத்தினர். 2020ஆம் ஆண்டு மார்ச் 12 ல் உளுந்தூர்பேட் டையில் இந்த ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 28ல் கட்சியின் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்ன துரை தலைமையில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை முற்று கையிடும் போராட்டத்தை நடத்தியது. உளுந்தூர் பேட்டை வருவாய் துறை அதிகாரிகளின் முயற்சியால் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரி களை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உளுந்தூர்பேட்டையில் எந்த ரயில் நிற்க வேண்டும் என்ற பட்டியலை மார்க் சிஸ்ட்கட்சி தலைவர்கள் ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்தனர். இந்த போராட்டத்தின் விளைவாக கொல்லம் விரைவு ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று சென்றது. மக்கள் ரயிலில் ஏறி பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெய் சங்கர், மாவட்ட செயற்குழு ஜி.ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.தேவி, பி.சின்னராசு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி,ஒன்றிய செயலாளர்கள் ஜெ.ஜெயக் குமார், டி.எஸ்.மோகன் மற்றும் நூற்றுக்கணக் கானோர் வரவேற்பு நிகழ் வில் கலந்து கொண்டனர். இதில் சட்டமன்ற உறுப்பி னர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் மற்றும் விசிக மாவட்ட செயலாளர் (கிழக்கு), கு.அறிவுக்கரசு, உளுந்தூர் பேட்டை வணிகர் சங்க தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். - சசிக்குமார்
மக்கள் கோரிக்கை என்ன ?
உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சின்னசேலம் வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும், சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை ரயில் பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது அதை உடனடியாக முடிக்க வேண்டும். அதன் பிறகு உளுந்தூர்பேட்டையில் இருந்து சேலம், கோவைக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.