districts

img

வெள்ள நிவாரணம் கேட்டு சிதம்பரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், டிச. 24- வெள்ள நிவாரணம் கேட்டு சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரிய நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்க ளுக்கு ரூ 30 ஆயிரம் ,உளுந்து, பச்சை பயிர், மணிலா, பூச்செடிகள், கரும்பு உள்ளிட்ட வகைகளுக்கு உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பர நகரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்து குமரன், மல்லிகா, அம்சாயாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன்,  சிதம்பரம் நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் திருமுட்டத்தில் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் தினேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேன்மொழி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.