districts

img

குண்டர் சட்டத்தை காட்டி மிரட்டும் வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர்

ராணிப்பேட்டை, ஜன,24- ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாபாரி மீது பொய்வழக்கு போட்ட தோடு  உயர் அதிகாரிகளிடம்   புகார் செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது  செய்வேன் என்று வியா பாரியை மிரட்டி வரும்   வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர்  இரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் புத னன்று (ஜன. 24)  ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாம்பாக்கம் கூட் ரோட்டில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு  கட்சியின் கலவை வட்டார செயலாளர் எஸ்.கிட்டு தலைமை தாங்கினார்.  இந்த  ஆர்ப்பாட்டத்தில்  கட்சியின்  ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் என்.காசி நாதன், மாவட்ட செயற்குழு   உறுப்பினர்கள் பி.ரகுபதி, டி.சந்திரன், கே.சேகர், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் என்.ஆதிமூலம், ஏ.சம்பத், கே.வெங்கடேசன், எஸ்.விஜயா உள்ளிட்ட பலர் பேசினர்.   மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கட்சியின் கிளைச் செயலாளர் தனசேகரன் மாம்பாக்கம் கூட் ரோட்டில் காய்கறி வியாபாரம் செய்து  வருகிறார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23 ஆம்  தேதி ஆரணியில் காய்கறி  வாங்க அவர் சென்றிருந்தார். அப்போது அவரது மனைவி செந்தமிழரசி கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நிர்மலா, அவரது மகன் சதிஷ் ஆகி யோர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருநத பொரி மூட்டைகளை சாலையில் வீசி ஏறிந்து அராஜகத்தில் ஈடுபட்டதோடு செந்தமிழர சியை தாக்கினர். இதுதொடர்பாக வாழைப்பந்தல்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது உதவி ஆய்வாளர் இரமேஷ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துணைத்தலைவரிடம் பொய்யான புகாரை எழுதி  வாங்கிக்கொண்டு பாதிக்கப் பட்ட தனசேகர் மீதே பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்தார்.  அத்தோடு நிற்காமல் இதுகுறித்து உயர் அதிகாரி களிடம் புகார் கொடுத்தால்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டி  வருகிறார். எனவே உதவி  ஆய்வாளர் மீது காவல்துறை உயர் அதிகாரி கள் தலையிட்டு நடவடிக்கை  எடுக்கக்கோரி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.