districts

img

100 நாள் வேலை கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அச்சிறுப்பாக்கம், டிச.3-  வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது  செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட சித்தாத்தூர், விநாயக நல்லூர், துறையூர் கிராம மக்களுக்கு 4 மாத காலமாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சிமன்றத் தலைவரிடம் பலமுறை மனு கொடுத்தும் நேரில் சந்தித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  2024 ஆண்டுக்கான ஏரி வேலை சொற்ப நாட்கள் மட்டும் வழங்கப்பட்டுள் ளது. நூறு நாட்களிள் வேலை வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும், 90 நாட்கள் உள்ள நிலையில் 100 நாட்கள் பூர்த்தி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்து வேலை வழங்க வலியுறுத்தியும் சிபிஎம் கிளைச் செயலாளர் கோதண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராஜா,  மூத்தத் தலைவர் டி.கிருஷ்ணராஜ், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் வி.திருமலை உள்ளிட்ட பலர் பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு வார காலத்திற்குள் வேலை வழங்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.