மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (ஏப்.7) வில்லிவாக்கம் பகுதி 95வது வட்டத்தில் துண்டறிக்கை பிரச்சாரம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 95வது வட்டம் பி கிளைச் செயலாளர் டி.சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை திமுக பகுதி செயலாளர் கூ.பி.ஜெயின் தொடங்கி வைத்தார். சிபிஎம் பகுதிச் செயலாளர் எம்.ஆர். மதியழகன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி. அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.