சென்னை, ஜூலை 11- வி.பி. நகரில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் சிபிஎம் மாமன்ற உறுப்பி னர் ஆர்.ஜெயராமன் புதன்கிழமை நள்ளிரவு சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டார். சென்னை மாநகராட்சி திருவொற்றி யூர் மண்டலம் 4ஆவது வார்டு வி.பி. நகரில் தற்போது மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தினசரி கால்வாய் பணி மேற்கொள்ளும் போது, ஏற்கெனவே இருக்கும் கால்வாயில் வரும் மழைநீர் வராமல் இருக்க திண்டு (தற்காலிகஅடைப்பு) கட்டி அடைக்கப் படும். மாலையில் வேலை முடிந்தவுடன் கட்டப்பட்ட திண்டை அகற்றி மழை நீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் பணி செய்வதற்காக அடைக்கப்பட்ட திண்டை அகற்றாமலே சென்று விடும் நிலை இருந்தது. இதனால் மழைநீர் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடியது. மேலும் பல வீடுகளுக்குள்ளும் புகுந்தது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து மாமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதனடிப்படையில் ஒப்பந்த பணியில் ஈடுபட்ட பொறியாளர் பிரவின் என்ப வரை தொடர்பு கொண்டு அடைப்பை நீக்குமாறு மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார். பொறியாளர் பிரவின் அங்கு பணி செய்து வரும் உதவி ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் அடைப்பை எடுக்கா மலேயே எடுத்து விட்டதாக தெரிவித் துள்ளார். இதனை கண்டித்து மாமன்ற உறுப்பினர் ஜெய ராமன் தலைமையில் வி.பி. நகர் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு துவங்கிய போராட்டம் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. பின்னர் பொறியாளர் பிரவின் பணியாளர்களை அழைத்து வந்து அடைப்பை நீக்கினார். அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதில் வி.பி. நகர் செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் விஜய குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக் குழு உறுப்பினர் வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.