districts

img

சிபிஎம் வளர்ச்சி நிதி: 4 நாட்களில் ரூ.5லட்சம் வசூல்

திருவண்ணாமலை, டிச.31- திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் பகுதிகளிலும் வசிக்கும் எழை, எளிய மக்களிடம் உண்டியல் ஏந்தி கட்சியினர் நிதி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.   மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும்  சிபிஎம்க்கு கடந்த 4 நாட்களில் ரூ.5 லட்சத்தை மாவட்ட மக்கள் வழங்கியுள்ளார். நிதி வசூல் இயக்கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.