districts

சென்னை முக்கிய செய்திகள்

மாசற்ற வடசென்னையை உருவாக்குக! 
குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 18- மாசற்ற வடசென்னையை உருவாக்க  வேண்டும் என வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் துவக்க விழாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்: வடசென்னைக்குட்பட்ட திரு வொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதி களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்களால், நச்சுப் புகையால் தண்ணீர், காற்று மாசடைந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ரசாயன கழிவுகள் சுத்தப்படுத்தப்பட்டு வெளி யேற்றுவதையும், பாதுகாப்பு நடவடிக்கை களையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் புதைவட மின்சார கேபிள் அமைக்கப்பட வேண்டும். மின் கட்டண கணக்கீட்டை மாதம் தோறும் நடத்த வேண்டும், சுகாதாரமான குடிநீரை தினசரி வழங்க வேண்டும். குடிநீர் இணைப்பு வழங்கப்படாத குடியிருப்புகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பாதாள சாக்கடை அமைக்கப்படாத பகுதிகளில் விரைந்து பாதாள சாக்கடை அமைக்க வேண்டும், ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி மழை நீரை சேமிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொரு வார்டிலும் ஒரு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தாய் சேய் நல மையம் நவீன மருத்துவ உபகரணங்களுடன் அமைத்து தேவைக்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். தூய்மை பணிகளை மாநகராட்சி நேரடி யாக மேற்கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, தெரு நாய்கள் பராமரிப்பு மையம் அமைத்து அங்கு நாய்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கியமான வழித்தடத்தில் பறக்கும் சாலை, மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். மெட்ரோ ரயில் வழித்தடங்களை அதிகரிக்க வேண்டும். வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மெட்ரோ  ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னை, ஆக.18- சென்னையில் தற்போது பச்சை மற்றும் நீல நிறத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோவில் தவிர்க்க முடியாத ஏதாவது ஒரு சூழலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதும் தாமதமாக இயக்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில் தற்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் தாமதமாக மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்சினை சரி செய்யப்பட்டு சேவை சீராகும் என மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் படைவீரர்  குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி,ஆக.17 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்க ளுக்கு சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர்  பிரசாந்த் தலைமை யில் ஆக.23 (வெள்ளிக் கிழமை)  மாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் கோரிக்கையினை தனித்தனி மனுக்களாக தெளிவாக எழுதி இரட்டை பிரதிகள் மற்றும் அசல் படை பணிச்சான்றுடன் வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மொழி பெயர்ப்பு பயிற்சி முகாம்

சென்னை, ஆக. 19 தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்கு விக்கும் நோக்கத்துடன், நடிகர் கமல்ஹாசன் கமல் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த பண்பாட்டு மையம் சார்பில், ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்தப்படுகிறது.பல சர்வதேச எழுத்தா ளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.குப்புசாமி பயிற்றுவிக்க உள்ளார். இந்தப் பயிற்சி முகா மில் கலந்துகொள்ள விரும்பு கிறவர்கள், தங்களது சுய விவரங்களுடன் kamalpan pattumaiyam books@gmail.com எனும் மின்ன ஞ்சல் முகவரிக்கு விண்ணப் பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழி பெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவமும் இணைக்கப்பட வேண்டும்.  விண்ணப்பிக்க  கடைசி நாள் ஆக. 25 ஆகும்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலை, ஆக.18- முதல்வர் கோப்பைக் கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலையில் போட்டிகளை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட  ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்க ளில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய கடைசி நாள்: 25.8.2024  என்றும் கூடுதல் விவரங்களுக்கு 7401703484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விழுப்புரத்தில் நாளை  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விழுப்புரம், ஆக.18- விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாயன்று  (ஆக.20)  பிற்பகல் 3 மணிக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம்” என்று தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

மின் வேலியில் சிக்கிய  கூலி தொழிலாளி பலி : 3 பேர் கைது

விழுப்புரம், ஆக.18- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்டம், பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுவாடி கிராமத்தில் அய்யனார் என்பவர் தனது நிலத்திற்குள் காட்டு பன்றிகள் நுழைவதை தடுக்க சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் (56) என்பவர் மாடு மேய்க்க சென்ற போது மின் வேலியில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த  கோதண்டராமன் (38),  ராஜ்குமார் என்கிற ராஜகுமாரன் (25), அய்யனார் (38) ஆகிய மூன்று நபர்கள் என தெரியவந்தது. உடனடியாக மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருளர் இன மக்களை வெளியேற்ற கூடாது
கிராம சபை கூட்டத்தில் சிபிஎம் கோரிக்கை

ராணிப்பேட்டை, ஆக.18- ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம் செட்டித்தாங்கல் ஊராட்சி யில் கிராம சபை கூட்டம் ஊராட்சிமன்றத் தலை வர் வளர்மதி அன்பழகன் தலைமையில்  வியாழக் கிழமை (ஆக. 15)  நடை பெற்றது. இதில், செட்டித்தாங்கல் ஊராட்சி மன்றத்தின் உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் இருளர் இன குடும்பங்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருதாலம் ஊராட்சி மன்றத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர் என். ரமேஷ், ஊராட்சி மன்றம் எடுத்த முடிவுக்கு கடும் ஆட்சேபனை தெரி வித்தார். மேலும், செட்டி தாங்கள் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருளர் இன மக்களுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று வலி யுறுத்தினார்.