districts

img

கொலையான வாலிபர் குடும்பத்திற்கு சிபிஎம் ஆறுதல்

விழுப்புரம், மார்ச் 30- விழுப்புரத்தில பல்பொருள் அங்காடிக் குள் நுழைந்து ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன், தம்பியை  காவல்  துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த வர் இப்ராகிம் (45). இவர் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இவர் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக இப்ராகிம், தான் வேலை பார்க்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்றார். அந்த சமயத்தில் அந்த கடைக்குள் பதுங்கி நின்ற ஒரு பெண்ணிடம் 2 வாலிபர்கள் தகராறு செய்து,  அவரை தாக்கினர்.   இதைப்பார்த்த இப்ராகிம் மற்றும் அரசமங்கலத்தை சேர்ந்த தீபக் (23) ஆகிய இருவரும் அவர்களை தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், இப்ராகிம், தீபக் ஆகிய இருவரையும் தாக்கியதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தினர்.   இதில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி யோட முயன்றனர். அவர்களை அங்கிருந்த கடை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து விழுப்புரம் மேற்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  தெரிவிக்கப்பட்டது. மேலும்  காவல் துறையினர் இப்ராகிம், தீபக் இரு வரையும் விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல் லும் வழியிலேயே இப்ராகிம் இறந்தார். தீபக் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையினர் அந்த வாலிபர்க ளிடம் நடத்திய விசாரணையில், இருவரும் விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ராஜசேகர் (33), வல்லரசு (24) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜி.ராஜேந்தி ரன், எஸ்.முத்துகுமரன் ஆகியோர் உயிரிழந்த இப்ராகிம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்  கூறினர்.

;