திருவண்ணாமலை, ஆக.20-
திருவண்ணாமலை அருகே ஹிஜாப் அணிந்து வந்த இளம் பெண் இந்தி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்திருக்கிறது.
திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிரா மத்தில் உள்ள அண்ணா மலையார் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளியில், ஞாயிறன்று (ஆக.20) இந்தி பிரச்சார சபா சார்பில் இந்தி மொழி பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. கீழ்பெண்ணாத்தூர், போளூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வந்துள்ளனர்.
திருவண்ணாமலை கரி காலன் தெருவை சேர்ந்த மாணவி ஷபானா என்பவர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதியுள்ளார். 10 நிமிடங்களில் கடந்த நிலை யில், தேர்வறை மேற்பார் வையாளர் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வு எழுதக்கூடாது என்று கூறி யுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்திருக் கிறார். இதனால் இரு வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தலையீடு செய்த பள்ளி நிர்வாகமும் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வு எழுதக்கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட்டது. அப்படி முடியாது என்றால் வெளியே செல்ல லாம் என்றும் கூறியுள்ளது. பிறகு, அந்த பெண்ணை தேர்வு அறையில் இருந்து வெளி யேற்றியுள்ளனர்.
திருவண்ணாமலையில் தனியார் பள்ளி ஒன்றில் அரபி ஆசிரியையாக பணி யாற்றி வரும் அந்த இளம் பெண்ணை தேர்வு எழுத விடாமல் வெளி யில் அனுப்பிய தனியார் பள்ளியின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எம். சிவக்குமார் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.