விழுப்புரம், அக். 20- விழுப்புரம் மாவட்டம், அன்னம்பாக்கம் பழங்குடி இருளர் இன மக்கள் தனி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திண்டிவனம் அருகே உள்ள அன்னம்பாக்கம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் சாலை, குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரப்படவில்லை. இந்த நிலையில், சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன் தலை மையில் திண்டிவனம் தனி வட்டாட்சி யரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பட்டியலினத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பத்திற்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள் உடனடியாக வழங்க வேண்டும். சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா வழங்கி அனைவருக்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தினர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் டி.இராமதாஸ், திண்டிவனம் பகுதிக்குழு உறுப்பினர் ஏ.ம.சதீஷ் குமார், கீழ் ஆதனூர் கிளை செய லாளர் ஐ.வெங்கடேசன், வாலிபர் சங்க நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.