புதுச்சேரி,ஆக.20-
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி லாஸ்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெத்துசெட்டிபேட்டை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். கொள்ளுமேடு மைதானத்தை சிறுவர் பூங்காவாக மாற்ற வேண்டும். லாஸ்பேட்டை உட்புற சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும், குடிநீர் வழங்கும் நேரத்தை கூடுதலாக்கி சுத்த மான குடிநீர் வழங்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் வலியுறுத்தினர்.
உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். குணசேகரன், ராமசாமி, செல்வம், சங்கர், தேவநாதன், குமார் உட்பட பலர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.