மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் கொளத்தூர் சிவசக்தி நகரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, நிர்வாகிகள் மூர்த்தி, நாகலிங்கம், முருகக்கனி, கோடீஸ்வரன், ஜெயராமன், தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.