திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரைக்கு ஆதரவாக சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. போளூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகே நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் தொ.மு.ச மாநில துணைப் பொதுச் செயலாளர் சௌந்தரராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் .ராமதாஸ், திமுக நிர்வாகிகள் சற்குண பாண்டியன், இ.பி. சரவணன், வேங்கிக்கால் பரத், சிபிஎம் வேங்கிக்கால் கிளை செயலாளர் கண்ணன், மூத்த நிர்வாகி எஸ். ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தகைசால் தமிழர் என். சங்கரய்யா கலைக்குழுவின் அரசியல் விளக்கப் பாடல்கள் இசைக்கப்பட்டது.