districts

img

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிபிஎம் பிரச்சார இயக்கம்

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் திங்களன்று (மார்ச் 6) கிழக்கு கடற்கரை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ப.நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் பி. ஜெயவேல், பகுதி குழு உறுப்பினர்கள் பூங்காவனம், வடிவேல், சுரேஷ், குணசேகரன்,  கிளை செயலாளர் ஆர். சாந்தாதேவி உள்ளிட்டோர் பேசினர்.