districts

சென்னை முக்கிய செய்திகள்

அரசாணை 45ஐ ரத்து செய்ய வேண்டும் மாநகராட்சி கூட்டத்தில் சிபிஎம், காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 28 - தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை  45ஐ ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தின. பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம்  வெள்ளியன்று (ஏப்.28) ரிப்பன் மாளிகை யில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரம் தொடங்கும் முன்பு, காங்கி ரஸ் உறுப்பினர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ் ஆகியோர் அரசாணை 45க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினர் ஆர்.ஜெயராமன், குறிப்பிடுகை யில், “மன்றத்தின் உரிமைகளை அரசு எடுத்துக் கொள்வது சரியல்ல. இதனை முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றார். நேரமில்லா நேரத்தில் பேசிய சிபிஎம் உறுப்பினர் விமலா, “பெருநகர சென்னை மாநகராட்சியை உள்ளடக்கி ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதி-2023’ என்ற பெயரில் 12.4.2023 அன்று அரசாணை 45ஐ வெளியிட்டுள்ளது. இந்த  விதியானது சென்னை மாநகராட்சி பணி யாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வுகளுக்கு  உறுதியற்றதாக உள்ளது. எனவே, இந்த விதிகளை அரசு ரத்து செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சி சட்டம்-1919ன் படி உள்ள பணியமைப்பு விதி களையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்”என்றார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா  மற்றும் ஆணையர் ககன்தீப்சிங் பேடி  ஆகியோர், “துறை அமைச்சர், முதலமைச்சர்  ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.” என்று தெரிவித்தனர்.

ஆன்லைன் புகார் செய்து பணம் பறிப்பவர்கள்  மீது நடவடிக்கை: மாமன்றத்தில் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 28 - ஆன்-லைன் புகார் கொடுத்து பணம் பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருநகர மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய உறுப்பினர் ராஜன், நகர விற்பனைக் குழுவில் கவுன் சிலர்களும் இடம்பெறச் செய்ய வேண்டும்.  ஆக்கிரமிப்பு என்றபெயரில் சிலர் ஆன்லை னில் புகார் தருகிறார்கள். அவர்களுக்கும், அந்த பகுதிக்கும் தொடர்பே கிடையாது. புகாரின் பேரில் கோவில், மசூதி, தேவால யங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்கின்றனர். அதிகாரிகளை கேட்டால் புகார்தாரரை கைகாட்டுகிறார்கள். புகார் தாரரிடம் பேசினால், புகாரை திரும்பபெற பல லட்சம் ரூபாய் கேட்கின்றனர். இத்தகைய  செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில், மசூதி, தேவால யங்களுக்கு நோட்டீஸ் கொடுப்பதிலிருந்து விலக்கு தர வேண்டும் என்றார். 138வது வார்டு உறுப்பினர் கண்ணன் குறிப்பிடுகையில், “பூங்காக்களை ஒப்பந்தம்  எடுத்த மகேஷ்,  வசந்த முல்லை நிறுவன ஒப்பந்ததாரர் முனியாண்டி ஆகியோர் பணி களை சரிவர செய்யவில்லை. அவர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்” என்றார். இவற்றிற்கு பதிலளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “ஒரே நபர் அதிகப்படி யான பூங்காக்களை ஒப்பந்தம் எடுக்க முடி யாத வகையில் சிப்பம் முறையில் ஒப்பந்தம் கோரப்படும். ஒரு சிப்பம் எடுத்தவர் மற்றொரு சிப்பத்தை ஒப்பந்தம் எடுக்க முடி யாது. இதேபோன்றுதான் கழிப்பிட ஒப்பந் தங்களும் வகுக்கப்பட்டுள்ளது” என்றார். மேயர் ஆர்.பிரியா கூறுகையில், ஒப்பந்த தாரர் மகேஷ், முனியாண்டி ஆகியோர் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பப்பெறுங்கள்

திமுக அரசுக்கு முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் அறிவுறுத்தல்!!
 

சென்னை,ஏப்.28. காந்தி தேசத்தை கார்பரேட் மய மாக்குவதா? என்ற தலைப்பில் கருத் தரங்கம் சென்னை தி.நகரில் நடை பெற்றது.  மூத்த பத்திரிகையாளர் “அறம்” சாவித்திரி கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் இந்நிகழ்வில் பங்கேற்று பேசியது வருமாறு: “கல்வியாளர்கள், சட்ட வல்லு நர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற் றுள்ள இந்த அவையில்  இரண்டு  முக்கிய விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். மத்திய பா.ஜ.க.அரசு போல  எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல்  தமிழ்நாட்டு அரசு  அவசர அவசரமாக நிறைவேற்றிய சட்டங்க ளான 12 மணி நேர வேலை திட்டம், விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டங்கள் மக்கள்  நலனுக்கு எதிரானவை. இங்கு தொழில்  தொடங்க வாருங்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பன்னாட்டு நிறுவ னங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்தே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி னால் தொழிலாளர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பிழிந்து வேலை வாங்கிக் கொள்ளலாம், நிலங்களை தாராளமாக பெற்றுக் கொள்ளலாம் என்பதை இந்த சட்டங்கள் வாயிலாக சொல்லாமல் சொல்லி உள்ளனர் ஆட்சியாளர்கள். தோழமைக் கட்சிகள்  மற்றும் தொழிலாளர்கள், பொதுமக்க ளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக  தமிழக அரசு இந்த சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. நிறுத்தி வைத்தல் போதாது வாபஸ்  வாங்குவதுதான் சரியான நடவடிக்கை ஆகும்.  நெடுவாசல், ஜல்லிக்கட்டு,எட்டு வழிச்சாலை எதிர்ப்பு உட்பட பல்வேறு போராட்டங்க ளுக்கு கிடைத்த வெற்றி அரசியல் கட்சி களால் அல்ல, மக்களால்  என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சென்னை மெரினா அருகே மீனவ  குப்பத்துக்கும் கடற்கரைக்கும் இடை யில்  லூப் சாலை போட்டதே தப்பு.  அங்கு மீன் கடை போட்ட மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதுவது எப்படி நியாயமாகும்?.  நீதி மன்றம் இந்த பிரச்சினையை தானாக  கையில் எடுத்த போது, உரிய முறையில்  தமிழக அரசு அணுகவில்லை. நடைமுறை உண்மையை தெரிவித்து இருக்க வேண்டும்.

இல்லையேல் அவகாசம் பெற்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இருக்க வேண்டும்.  மீன் கடைகளை அகற்றியவர்கள் தஞ்சாவூர் செல்வார்களா? எண்ணூரில் கடலுக்கு வெளி யேகூட இல்லை கடலுக்கு உள்ளேயே 2000 ஏக்கர் நிலத்தை அதானிக்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு  ஒதுக்கி கொடுத்திருக்கிறது. நீதிமன்றம்  உத்தரவு போட்ட மறுநாளே சென்னை  கடற்கரையில் உள்ள மீனவ கடைகளை  அப்புறப்படுத்தி விட்டார்கள். நீதி மன்றம் உத்தரவு போட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் தஞ்சாவூர் சாஸ்திரா கல்லூரி ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லையே ஏன்? கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் மீது உரிய நடவடிக்கை  இல்லை. பாதிக்கப்பட்ட அப்பாவி தலித்  இளைஞர்களுக்காக எழுதிய பத்திரி கையாளர் சாவித்திரி கண்ணனை சென்னைக்கு வந்து கைது செய்தீர்கள்.  காவி வழி கார்ப்பரேட்டுகள் நலனுக் கானது. அது கூடாது என்று தான் உங்களை மக்கள் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். நீங்களும் அந்தப் பாதையை தேர்வு செய்தால் மக்களால் அதிகாரத்தில் இருந்து  அப்புறப்படுத்தப்படுவீர்கள்.! இவ்வாறு  முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பேசினார். இந்த நிகழ்ச்சியில்  கே பால கிருஷ்ணன் (ஐக்கிய விவசாயிகள் முன்னணி),வெற்றி செல்வன் (பூவுலகின் நண்பர்கள்) ஆகியோரும் உரையாற்றினர்.  முன்னதாக இலங்கை  வேந்தன் வரவேற்றார். ஜா.செழியன் ( காக்கைக்கூடு)  நன்றி கூறினார்.

2 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பு


திருநின்றவூர்,ஏப்.27-  சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 4500 ஏக்கர் பரப்பள வில் பரந்து விரிந்து உள்ளது. இது அம்பத்தூர், திருமுல்லை வாயல், சூரப்பேடு, அம்பத்தூர் பானுநகர், பொத்தூர் உள்ளிட்ட 14 இடங்களின் கரைகளை ஒட்டி அமைந்துள் ளது. இந்நிலையில் புழல் ஏரியில் தினமும் சுமார் 2 லட்சம்  லிட்டர் கழிவுநீர் கலப்பதாக சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள் ளனர். முக்கியமாக திருமுல்லைவாயல் பகுதியை ஒட்டிய  குடியிருப்புகளில் இருந்து அதிக அளவு கழிவுநீர் புழல்  ஏரியில் கால்வாய் மற்றும் பைப்பு மூலம் கலந்து விடப்படு வதாக கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சி தலையீடு: வாடகை பாக்கி பேனர் அகற்றம்

சென்னை, ஏப். 28 - மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீட்டை தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் வைக்கப்பட்ட வாடகை பாக்கி பட்டியல்  பேனரை அறநிலையத்துறை அகற்றியது. கோவில் நிலங்களில் ஏழை எளிய மக்கள் தலைமுறை  தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அறநிலையத்துறை நியாய வாடகை என்ற பெயரில் அநியாய  வாடகையை நிர்ணயித்துள்ளது. அந்த வாடகையை முன்தேதியிட்டு அமல்படுத்த நிர்பந்தித்து வருகிறது. இதனையொட்டி வாடகை பாக்கி வைத்துள்ளோர் பட்டி யலை குடியிருப்பு பகுதியில் பேனராக வைத்து வருகிறது.  இதேபோன்று 110வது வட்டம்,  நுங்கம்பாக்கம் சொக்கட்டான்  சாலை பகுதியிலும் அறநிலையத்துறை பேனர் வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்.19 அன்று நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டனக்  கூட்டம் நடைபெற்றது. அப்போது, அடிமனை வாடகை தாரர்களை கன்னியமாக நடத்த வேண்டும். ஏப்.30ந் தேதிக்குள் பேனரை அகற்றவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சி அகற்றும் என்று கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா எச்சரித்திருந்தார். இந்நிலையில், அருள்மிகு அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலரை   வியாழன்று (ஏப்.27) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி, பகுதிக்குழு உறுப்பினர் பி.வெங்கடேசன், கிளைச் செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட பொருளாளர் வி.செந்தில்குமார் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, மக்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது என்பதால்  உடனடியாக அதை அகற்ற வேண்டும் என்று வற்புறுத்தி னர். இதனையடுத்து அந்த பேனர் அகற்றப்பட்டது.

மாணவர்களுடன் காவல்துறை அதிகாரி கலந்துரையாடல்

கடலூர்,ஏப்.28- விருத்தாச்சலம் கல்வி மாவட்டம், தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர். அந்த மாணவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் வரவேற்றார். பின்னர், பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுடன் கலந்துரையாடினார்.  அப்போது உரையாற்றிய அவர், “நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறேன். நீங்களும் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும். படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும்”என்றார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில், ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கியும் மகிழ்வித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிர மணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னார்வலர்கள் சுகுணா, சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

கஞ்சா கடத்தல் வழக்கில் வியாபாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம்,ஏப்.28- கடந்த 2021 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, தூக்கனாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி முருகனை பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு.  அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதி தேன்மொழி, கஞ்சா கடத்திய முருகனுக்கு 2ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றொரு கஞ்சா கடத்திய வழக்கில் 1 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒரே நாளில்  54 மாணவர்கள்  அரசுப் பள்ளியில் சேர்ப்பு 

கள்ளக்குறிச்சி, ஏப்.28- கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜூ தலைமை தாங்கி பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பலரும் கலந்து கொண்டு சேர்ப்போம், சேர்ப்போம், மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்போம். ஒழிப்போம், ஒழிப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். பெண்கள் நாட்டின் இரு கண்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் 7 ஊராட்சிகளில் ஒரே நாளில் 54 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

மே 1 மது கடைகள் மூடல்

சென்னை,ஏப்.28- தமிழ்நாடு அரசின் ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் மதுக் கடைகளுக்கு காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதில் ஒன்றான மே தினத்தை முன்னிட்டு, வரும், 1 ஆம் தேதி மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் தடகள போட்டி

திருவண்ணாமலை, ஏப்.28- திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட விளையாட்டு சங்கம் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் 21-வது அருணை மருத்துவக்கல்லூரி தேசிய பெடரேஷன் கோப்பைக்கான ஜூனியர் தடகள போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. தேசிய ஜூனியர் தடகள போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான விளையாட்டு ஆடையை அறிமுகம் செய்த பின் டாக்டர் கம்பன் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெண் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வரலாம் புதுவை துணை நிலை ஆளுநர் அறிவிப்பு: சிஐடியு விமர்சனம்

புதுச்சேரி,ஏப்.28- புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்கள் தாமத மாக வரலாம் என  துணை நிலை ஆளுநர்  அறிவித்திருப்பது பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவதற்கு உதவாது என்று சிஐடியு விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஜி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் என்.ஆர். ரங்கசாமி ஆகி யோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் வெள்ளிக்கிழ மைகளில் காலை 2 மணி நேரம் தாமதமாக வரலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  இந்த சலுகை பெண் ஊழியர்கள் பெரும்பாலாக பணியாற்றும் சுகாதாரம், கல்வித்துறை, மருத்துவத்துறை போன்ற அத்தியாவசிய பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ள பகுதிகளில் தான் அதிக அளவில் பெண்கள் பணி யாற்றக்கூடிய துறைகளாக உள்ளன. எனவே அனைத்து பெண்களுக்கான ஒரு திட்டமாக இது அமையவில்லை என்பதை சிஐடியு சுட்டிக்காட்டுகிறது. அதே நேரம் புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சாலைகளில் மற்றும் தொழிற்பேட்டைகளில் பணியாற்றும் பெண்கள் மிக மோசமான சூழ்நிலையில் குடும்ப ஊதியத்திற்காக பல மணி நேரம் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் மூலம் மிகக் குறைந்த கூலி, அதேசமயம் அதிகமான வேலை பளு மற்றும் கூடுதல் நேரம் என கொத்த டிமைகளாக நடத்தப்படுகின்றனர். வார ஓய்வு, பேறுகால விடுப்பு என்ப தெல்லாம் அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. பெண்கள் நலன் காக்கும் அரசாக இருக்கு மானால் இது போன்ற ஆயிரக்கணக்கில் வேலை செய்து வரும் பெண்களுக்கு அவர்களது சாதாரண தொழி லாளர்களுக்கான உரிமைகளை அளிப்பதை உத்தரவாதப் படுத்துவது என்பது சிறப்பாக இருக்கும்.  இப்படி புதுச்சேரியில் பல்லாயிரக் கணக்கான பெண்களின் நலனை கருத்தில் எடுத்துக் கொண்டு முடிவுகள் எடுக்காமல், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் வழியில் வெள்ளிக்கிழமை மட்டும் பூஜை செய்வதற்கு ஏதுவாக காலையில் அரசு பணிக்கு தாமதமாக வரலாம் என  துணை நிலை ஆளுநர்  அறிவித்திருப்பது எந்த வகையிலும் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவதற்கு உதவாது.  இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

மீனவர் கொலை வழக்கில்  10 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர், ஏப்.28- மீனவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) தீர்ப்பளித்தது. 2018 ஆம் ஆண்டு சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஒன்று திரண்டு சோனாங்குப்பம் மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மவட்ட மற்றும் அமர்வில் நடந்து வந்தது.  21 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் வழக்கு விசாரணையின் போது உயிரிழந்துவிட்டார். மீதம் 20 பேர் வழக்கை சந்தித்தனர். மிக வும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளியன்று (ஏப். 28) வெளியானது. குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசை மணி, சரண்ராஜ், சுதாகர், சுப்பரமணி, தென்னரசு, ஸ்டாலின், முத்துகுமார் ஆகிய 10 பேருக்கு நீதிபதி பிரகாஷ் ஆயுள் தண்டனை விதித்தார். இந்த தீர்ப்பையொட்டி கடலூர் நீதிமன்ற வளாகம், தேவ னாம்பட்டினம், சோனாங்குப்பம் மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.