சென்னை,நவ.24- தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற அடிப்படையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தம் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 70 உள்ளது. 92 நடுநிலைப்பள்ளிகள் 119 ஆரம்ப பள்ளி களும் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்க வகுப்பறையில் ஆங்கில ஆசிரியர் பாடம் எடுப்பதற்கு முன்பாக 2 மாணவர்கள் 2 நிமிடம் ஆங்கி லத்தில் பேச வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக இப்போது வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக நடை பெறும் பிரேயரில் வாரம் ஒரு நாள் (புதன்கிழமை) ஒருவர் ஆங்கிலத்தில் பேசி நடத்த வேண்டும். சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த பிரேயர் சுமார் 17 நிமிடங்கள் முதல் 18 நிமிடம் வரை நடைபெறும். இதில் திருக்குறளை தவிர மற்றவைகளை ஆங்கி லத்தில் பேசுவதற்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்துவதால் ஆங்கில புலமையும் அதிகரிப்பதாக உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்தார். குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆங்கில புலமை பயிற்சி முழுமை யாக செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.