தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திங்களன்று (ஏப். 24) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அப்போது, பல்கலைக்கழக மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான அரவிந்த்சாமியை பட்டம் வாங்கவிடாமல் காவல்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அருண், மிருதுளா (மத்தியசென்னை), ஆனந்த், பாரதி (தென்சென்னை) உள்ளிட்டோர் பேசினர். இதேபோன்று வடசென்னை மாவட்ட குழு சார்பில் திருவொற்றியூரில் மாவட்ட நிர்வாகி அகல்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.