districts

பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்த தமிழ்நாடு அரசுக்கு ஒப்பந்ததரர்கள் நன்றி

சென்னை, மார்ச் 21- பேக்கேஜ் டெண்டரை (தொகுப்பு முறை) ரத்து செய்த தமிழ்நாடு அரசுக்கு ஒப்பந்ததரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்த தாரர்கள் கூட்டமைப்பின்  மாவட்டத் தலைவர்கள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாநில தலைவர் மு.திருசங்கு தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.  இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் உள்ள பழைய நிலுவை தொகை யையும் மற்றும் புதிய பணிகளுக்கான தொகையை நிலுவை இல்லாமல் நிதியை வழங்கி வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்றிய அரசின் 47ஆவது ஜி.எஸ்.டி.  கவுன்சில் கூட்டத்தில் 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக உயர்த்திய நிலையில், கூடுதலான 6 விழுக்காட்டை பழைய பணி களுக்கும் சுமார் 258 கோடியை தமிழ்நாடு  அரசே தருவதற்கு அரசாணை பிறப்பித்ததற் கும்,  பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்து  சி.எம்.ஆர்.டி.பி.யின் கீழ் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளில் தமிழ்நாடு ஒப்பந்த தாரர்களின் தகுதியை உயர்த்தி மாவட்ட அளவில் அனைவருக்கும் பணியாற்ற  வாய்ப்பு தந்த முதலமைச்சர், துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புலம் பெயர் தொழிலாளர்கள் அனை வருக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுத்து சாலை மற்றும் மேம்பால பணிகளை வேக மாக முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு ஒப்படைக்க உறுதுணையாக இருப்பதற்கும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் விலைப்புள்ளி குறித்த நேரத்தில் வெளியிடுவதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.