சென்னை, மார்ச் 21 - மேற்கு முகப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்த மார்ச் 25 அன்று அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மேற்கு முகப்பேரில் அரசு மேல் நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பயில்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த க.பீம்ராவ் மதுரவாயல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, இந்தப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினார். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் (ஆர்ஓ) வழங்கும் எந்திரத்தை வழங்கினார். தற்போது அந்த எந்திரம் பராமரிப்பின்றி உள்ளது. இந்தப் பள்ளியில் கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், கூடுதல் வகுப்பறை கள் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6 அன்று இந்திய மாணவர் சங்கத்தினர் கையெ ழுத்து இயக்கம் நடத்தினர். இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் பள்ளியை மேம்படுத்த கோரி திங்களன்று (மார்ச் 20) பள்ளி முன்பு மாணவர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ், சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் ராஜன் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலை வர் ஆனந்த்குமார், செயலாளர் ரா.பாரதி மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருடன் பள்ளிக்குள் சென்று தலைமை ஆசிரியர் சாந்தியுடன் பேசினர். இதனையறிந்து பள்ளி முன்பு குவிந்த பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் குறித் தும், பள்ளியில் மாணவர்கள் நடத்தப்படும் விதம், அடிப்படை வசதியின்மை குறித்து சரமாரியாக புகார் தெரிவித்தனர். அப்போது, காரம்பாக்கம் கா.கணபதி எம்எல்ஏ, க.பீம்ராவை தொடர்பு கொண்டு பேசினார். பெற்றோர், ஆசிரியர், மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் வகையில் சனிக்கிழமையன்று (மார்ச் 25) கூட்டம் நடத்தி, பள்ளியை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.