திருச்சியில் வாலிபர் சங்க தலைவர் தவ்பீக் மீது தாக்குதல் நடத்திய பிஜேபி குண்டர்களை கைது செய்ய கோரி பெரியபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலையரசன், மாவட்ட செயலாளர் டி.மதன், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.