districts

img

தோழர்கள் பாப்பா, ஜானகி அம்மாள் நினைவு கல்வெட்டு

மாதர் சங்க ஸ்தாபகர்கள் பாப்பா உமாநாத்,   ஜானகியம்மாள்  ஆகியோர் நினைவு கல்வெட்டு சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் திறக்கப்பட்டது. சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மாதர் சங்க மாநில துணைத் தலைவருமான பாலபாரதி  கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.மோகனா, மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, பகுதி தலைவர் ஜமுனா, பகுதி செயலாளர் ருக்மணி சிபிஎம் கட்சியின் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.வி.எல்லையன், மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.