சென்னை, ஜன. 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு அலுவலக கிளை உறுப்பினரும், கணினி பிரிவில் பணிபுரிந்த தோழர் க.வின்னி லட்சுமி (32) வியாழனன்று (ஜன. 26) சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். இந்த விபத்தில் அவரது கணவர் சண்முகமணி, உறவினர்கள் ரகுபதி, ஜெயபிரபா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தோழர் வின்னி வடசென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக கணினி பிரிவில் பணியாற்றியவர். பெரம்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த தோழர் கணேசனின் மகளான அவர் அனைத்து போராட்ட இயக்கங்களிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது உடல் எண்.1 இந்திரா நகர் முதல் தெரு, இ.எச். ரோடு, வியாசர்பாடி, சென்னை 39 என்ற விலாசத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜன. 28) மாலை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள இடு காட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.