districts

img

தோழர் வி.பாண்டியன் காலமானார்

சென்னை, பிப். 16- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள்  பெரம்பூர் பகுதிக்குழு உறுப்பினர் தோழர் வி.பாண்டியன் (61) வியாழனன்று (பிப். 16) உடல்நலக்குறைவால் காலமானார்.  இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூலம் மக்கள் நலனுக்காக பணியாற்றிய பாண்டியன் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிக்கு வந்தவர். 2001இல் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக எஸ்.கே.மகேந்திரன் இருந் தபோது அவரோடு சட்ட மன்றப் பணிகளுக்கு உதவி யாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக அயராது சேவை யாற்றினார்.  ஆட்டோ தொழிலா ளர் சங்கத்தின் வட சென்னை மாவட்டப் பொரு ளாளராகவும், அவ்வமைப் பின் முழு நேர ஊழியராகவும் செயல்பட்டார். கட்சியின் பெரம்பூர் பகுதி குழு உறுப் பினராகவும் அவர் வாழ்ந்த சிவகாமி அம்மையார் நகர்  குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொதுச் செயலா ளராக சிறப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார். பழைய 35ஆவது வட்டத்தில் கட்சியின் சார்பில் கவுன்சிலர் பத விக்கு போட்டியிட்டு கணிச மான வாக்குகள் பெற்றார்.  அவரது மனைவி ராமாயி  பெண்கள் கட்சி கிளையின் செயலாளராக உள்ளார். தோழர் பாண்டியனுக்கு 5  மகன்கள், ஒரு மகள் உள்ள னர். அவரது உடல் வெள்ளிக் கிழமை (பிப். 17) காலை 10 மணிக்கு பெரம்பூர் பி.பி.  ரோட்டில் உள்ள இடுகாட் டில் அடக்கம் செய்யப்படு கிறது.