districts

img

தோழர் சிவன் காலமானார்

சென்னை, பிப். 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வி.கே.சிவன் (73) செவ்வாயன்று (பிப். 7) காலமானார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், செலக்கரை என்னும் ஊரில் பிறந்த இவர் சிறு வயதில் மார்க்சிய சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டார். பின்னர் 1970-களில் சென்னை புரசைவாக்கத்தில் துணிக்கடையில் வேலை செய்துக் கொண்டு கொசப்பேட்டையில் உள்ள கிளையில் இணைத்துக் கொண்டு களத்தில் நின்று போராடினார். அப்பளம் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அப்பளம் தொழிலாளர் சங்கத்தை உருவாகியதில் பெரும் பங்கு வகித்தவர். மக்களிடம் தொடர்ந்து அரசியல் பேசுவது, இயக்கத்திற்கு கொண்டுவருவது, தீக்கதிர் வாங்க வைப்பது என தொடர்ந்து பணியாற்றி வந்தார். கேரள சமாஜ உறுப்பினராகவும் செயல்பட்டார். தனது இறுதிமூச்சு வரை ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று போராடினார். கொளத்தூர் துர்கா காலனி 2ஆவது தெருவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், ஆர்.nஜயராமன், மாவட்டக் குழு உறுப்பினர் பா.ஹேமாவதி, வி.செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் புதன்கிழமை (பிப். 8) காலை 10 மணிக்கு ஜிகேஎம் காலனியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.