சென்னை, அக். 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஹேமாவதி வெள்ளியன்று (அக்.21) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சென்னை தொலைபேசி மாநில துணைத் தலைவராகவும், அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராகவும், செயல்பட்டு வந்தவர் ஹேமாவதி. மார்க்சிஸ்ட் கட்சியின் தொலைதொடர்பு அரங்க முன்னாள் செய லாளராகவும் பணியாற்றி னார். அன்னாரது உடல் அஞ்ச லிக்காக ‘பி’ பிளாக், எப்.1, 3ஏ சுராஜ் பிளாட், அண்ணா தெரு, மடிப் பாக்கம், சென்னை- 91 என்ற முகவரியில் உள்ள அவ ரது இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளது. அன்னாரது உட லுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், செயற் குழு உறுப்பினர்கள் ச.லெனின், ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், எம். சி.பிரபாகரன், தா. கிருஷ்ணா,எம்.தாமு, ஜி.வெங்கடேஷ், தீ.சந்துரு, ரா.பாரதி, மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.குமார், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் உள்ளிட்டோர் மல ரஞ்சலி செலுத்தினர். ஹேமா வதியின் இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (அக்.22) மதியம் 1மணி அளவில் கீழ்க்கட்டளை மயானத்தில் நடை பெறுகிறது.