விழுப்புரம், பிப். 13- தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் செஞ்சி வட்ட செயலாளருமான எஸ்.நெடுஞ்சேர லாதன் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம் சிபிஎம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி யில் ஞாயிறன்று (பிப். 12) நடை பெற்றது. வட்டச் செயலாளர் ஏ.சகா தேவன் தலைமை தாங்கினார். சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி அவரது படத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.ராதா கிருஷ்ணன், பி.குமார், ஜி.ராஜேந்திரன், எஸ்.வேல்மாறன், மூத்த உறுப்பினர் ஏ.உதயகுமார், வட்டச் செயலாளர் டி.முருகன், நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ஜெ.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் பழனி, மாவட்டச் செயலாளர் வி.திருநாவுக்கரசு, கே.அரசு, அரசு ஊழியர் மாவட்டத் தலைவர் சரவணன், துணைத்தலைவர் ஏ.ஜெ.பார்த்திபன், வட்டத் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் புக ழஞ்சலி செலுத்தினர். வாலிபர் சங்க நிர்வாகி ஆனந்தராஜ் நன்றி கூறினார்.