districts

தோழர் நக்கீரன் துணைவியார் காலமானார்

திருவள்ளூர்,ஏப் .25- விடுதலைப் போராட்ட வீரர் மறைந்த முத்து உமயவேலாயுதம்  மருமகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான எம்.வி.நக்கீரன் மனைவி கனக சௌந்தரி உடல் நலக் குறைவால் திங்களன்று (ஏப்.24)காலமானார்.   அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பி னர் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், அகில இந்திய  சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்கள் வழித்தோன்றல்கள் சங்கத்தின் அறங்காவலர் கே.குருமூர்த்தி,  கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர் செல்வம், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், கே.விஜயன்,  கே.ராஜேந்திரன்,  ஏ.ஜி.சந்தா னம், இ.மோகனா, சி.பெருமாள்,  ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.எல்லையன் (சோழவரம்),  இ.ஜெயவேல் (மீஞ்சூர்), இ.ராஜேந்திரன் (கும்மிடிப்பூண்டி), எஸ்.இ.சேகர் (பொன்னேரி),  மாவட்ட குழு  உறுப்பினர்கள் பி.நடேசன், அனீப், பி.ரவி, அப்சல் அகமது, கீதா, சித்ரா, இ.தவமணி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் அ.து.கோதண்டன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வாசுதேவன்,  சிபிஐ மாநில நிர்வாகி ஏ.எஸ்.கண்ணன் மற்றும் அனைத்து கட்சியின் தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். எம்.வி.நக்கீரன் துணைவியார் மறைவுக்கு சிபிஎம் மத்திய  குழு உறுப்பினர் உ.வாசுகி, தீக்கதிர் பொது மேலாளர் பாண்டி, இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் ஏ.பாக்கியம் ஆகியோர் தொலை பேசி மூலம்  இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த கனக சௌந்தரியின் உடல் பாடியநல்லூரில் உள்ள மின் மயானத்தில் செவ்வாயன்று தகனம் செய்யப்பட்டது.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.