districts

img

தோழர் ஜி.மணிவண்ணன் படத்திறப்பு நிகழ்ச்சி

கடலூர், ஜூலை 7- கடலூரில் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. மணி வண்ணனின் படத்திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டு நராக பணிபுரிந்த ஜி.மணிவண்ணன் சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் கடலூர் மண்டல பொதுச்செயலாளராக பணி யாற்றி வந்தார். இவர் சமீபத்தில் கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தோழர்  மணிவண்ணனின் படத்திறப்பு நிகழ்ச்சி கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் ஜான் விக்டர் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து ஊழியர்  சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி  செலுத்தினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் மாத வன், நகரச் செயலாளர் அமர்நாத், சம்மேளன துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுப்புராயன், பாபு (ஆட்டோ சங்கம்),  விழுப்புரம் மண் டல பொதுச் செயலாளர் ரகோத்தமன், ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் பால்கி, சிபிஎம் கட லூர் ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் கண் ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் பி. கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மறைந்த ஜி.மணிவண்ணன் நினைவாக கட லூர் மாவட்ட ஆட்டோ சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய சங்கங்க ளுக்கு நிதி உதவியும், தீக்கதிர் பத்திரி கைக்கு வளர்ச்சி நிதியும் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் முத்துக்குமரன், தேவ ராஜ், மணிகண்டன், நடராஜன், கிருஷ்ணசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;