tamilnadu

img

சிவகிரியில் தோழர் நடராஜன் நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்ச்சி...

தென்காசி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளருமான தோழர் பி.நடராஜன் கடந்த ஆக.31 அன்று மாரடைப்பால் காலமானார். தோழர் நடராஜனின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி சிவகிரியில் நடைபெற்றது.

கட்சியின் வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் இரா.நடராசன் தலைமை வகித்தார். மாநிலச்செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் நடராஜன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் மறைந்த பீடித் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் எம்.ராஜாங்கத்தின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.முன்னதாக மறைந்த தோழர் பி.நடராஜன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த கொடிக்க
ம்பத்தில் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் செங்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தலைவர்கள் நடராஜனின் குடும்பத்தினர் மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினர். நினைவேந்தல் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.