கிருஷ்ணகிரி,நவ.30- மாநில உதவி செயலாளர், பிஎஸ்என்எல் இயூ பாபுவின் பணி ஓய்வு பாராட்டு விழா கிருஷ்ணகிரியில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பருதிவேல் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பாபு ராதா கிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் பிரபுதுரை அனை வருக்கும் இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டு கொடுத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி உமாராணி பல் நோக்கு மற்றும் எலும்பு சிறப்பு மருத்துவ மனையின் மருத்துவர் பி.கே.சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் விழாவுக்கு வந்த அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை, உப்பு பொது பரிசோதனைகள் நடத்தினார். அனை வருக்கும் இலவச தென்னங்கன்றுகள் வழங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் செயற்குழு உறுப்பினர் சேகர், பிஎஸ்என்எல் இயூ மாநில மாவட்ட முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் நாராயணசாமி, கோபாலன், ஹரிஹரன், உமாராணி பாஸ்கரன்,பிற சங்க நிர்வாகிகள் அரிராவ், அகோரம், முனியப்பன் உள்ளிட்டோரும் வாழ்த்தினர் பணி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் இயூ மாநில உதவி செயலாளர் எம்.பாபு, அவரது மனைவி அறிவரசி அனைவருக்கும் நன்றி கூறினர்.