மகாத்மா காந்தி பிறந்தநாளில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒற்றுமைமேடையின் மாவட்ட நிர்வாகி சி. சுப்பிரமணி, தமுமுக மாவட்ட செயலாளர் கலிமுல்லா, சிபிஎம் நகர செயலாளர் எம்.பிரகலநாதன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் அ.செந்தில், தவிச மாவட்ட பொருளாளர் அருண், ஒன்றிய தலைவர் ராஜகோபால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.