districts

img

பாலாற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பு

ஆம்பூர், ஏப். 16- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோமலா புரம் ஊராட்சி பாலாற்றில் ரசாயன கழிவு பிளாஸ்டிக் கேன்களை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தீ கொளுந்து விட்டு எரிந்த தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.