கிருஷ்ணகிரி, ஜன.21- பர்கூர் அரசு கல்லூரியில் வகுப்பு முடிந்து பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை அங்கி நாயனப்பள்ளி அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது, மாணவிகள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வர்கள் ஓடி வந்தனர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பர்கூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் ஊத்தங்கரையை அடுத்த கீழ் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் மாணவி ஆசா உயிரிழந்துவிட்டதாக தெரி வித்தனர். மேலும், படுகாயமடைந்த மாணவி களுக்கு சிகிச்சைகள் அளித்தனர். இந்த தகவலை அறிந்து மருத்துவமனைக்கு வந்த பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், பாதிக்கப்பட்ட மாண வர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். பின்னர், மாணவி ஆஷா வின் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார் இந்த விபத்தில் பலி யான மாணவி ஆஷா வின் உடலை, உடற்கூராய்விற் காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரிக்கு குறித்த நேரத்தில் சென்று வர போதிய பேருந்து வசதிகள் இல்லை என்றும் இதனால் தினமும் கூட்டமாக ஆட்டோவில் பயணம் செய்து வருகிறோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.