ஓசூர் முதுகான பள்ளி ஊராட்சியில் டைட்டன் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேசன் நிறுவனம் சார்பாக பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி 50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயச்சந்திரபானுரெட்டி திறந்து வைத்தார். டைட்டன் நிறுவன தலைமை செயல் அலுவலர் என்.பி.ஸ்ரீதர், நிறுவன சமூகப் பொறுப்புணர்வு குழுத் தலைவர் கைலாசநாதன், துணை இயக்குநர் கோவிந்தன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.