வேலூர், ஜூன் 24-
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன் படுத்தப்பட்டு வந்த வாகனம் கழிவு செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகிறது. வருகிற 5 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடை பெறுகிறது. வாகனத்தை பார்வை யிட விரும்புவோர் அலு வலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப் படுவர்.
ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் வருகிற 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்வைப்பு தொகையாக ரூ.6,500 வங்கி வரை வோலை மற்றும் உரிய புகைப்பட அத்தாட்சி நகலுடன் வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேரில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடு தலாக ஏலம் கேட்கும் ஏல தாரர் ஏலத்தொகையில் 100 விழுக்காடு மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. 18 விழுக்காடு தொகையை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். அதன்பின்னர், ஏல தாரருக்கு வாகன விடு விப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.