districts

போக்குவரத்து விதிமீறல் நிலுவை தொகை வசூல்

சென்னை,ஜூன் 14-

    சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 5 மாதங்களில் நிலுவையில் இருந்து சுமார் 1,90,246  வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.7 கோடியே 96 லட்சத்து 97 ஆயிரத்து 130 அபராதத் தொகை  வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் இது ஒரு துன்புறுத்தல் என்று பாராமல், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நிலு வையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை செலுத்துவதற்கான விழிப்புணர்வு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் மென போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.