வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வசூல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாதவரம் செங்குன்றம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்றது. இதில் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், சிபிஎம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், நிர்வாகிகள் என்.ராகவன், வி.சரவணன், திருமால் நகர் சரவணன், கே.கார்த்தி, வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் கே.கார்த்திக், வி.கண்ணன், சபரி, ஆனந்தன் (ஆட்டோ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.