districts

img

தென்னை தின விழா

 கிருஷ்ணகிரி,செப்.8- கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.  அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார்.சிஎஸ்ஐஆர் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி விஜய் ஆனந்த்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு நன்மை தருவது மற்றும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். தென்னை சாகுபடியில் முன்னோடி விவசாயி கென்னடி விவசாயிகளுக்கு தென்னை சார்ந்த தொழில்கள் குறித்து எடுத்துரைத்தார். மையத்தோடு தொடர்புள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.