districts

img

இ சேவை மையங்கள் மூடல் சிஐடியு எதிர்ப்பு

சென்னை, மே 9- மக்களுக்கு சேவை செய்து வரும் இ சேவை மையங்களை மூடுவதற்கு சிஐடியு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் அரசு இ-சேவை மையங்களை மூடும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று (மே 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாநிலத் தலைவர் கே.சி.கோபி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, அரியலூர், கோயம்பத்தூர், திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், தஞ்சா வூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி மற்றும் வேலூர், ஆகிய மாவட்ட தனி வட்டாட்சியர்களுக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற போர்டு கூட்டத்தில் இரண்டு மையங்களை 1 மையங்களாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட தனி வட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் 96 மையங்கள் இணைக்க ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 96 இசேவை மையங்களை மூடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 96 மையங் களில் 60 மையங்கள் தென் சென்னை மற்றும் வட சென்னையில் உள்ளது. இந்த உத்த ரவை செயல்படுத்தினால் தமிழகம் முழு வதும் 96 ஊழியர்களின் பணி பறிபோகும். இவ்வாறு அவர் கூறினார். இதில் சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகுமார், சங்க நிர்வா கிகள் பாண்டி, சையத், கணேஷ், தன லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.