சென்னை, ஜூலை 26-
கிழக்கு கல்லறை சாலை பகுதியில் குடிசைகளை அகற்றுவதால் அந்த மக்களுக்கு அருகாமையில் அடுக்குமாடி குடியிருப்பு களை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குநரை சந்தித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், ராயபுரம் பகுதிச்செயலாளர் எஸ்.பவானி, பகுதிக்குழு உறுப்பினர் டி.வெங்கட் ஆகியோர் மனு அளித்தனர்.
அந்த மனுவில், 51ஆவது வட்டம் கிழக்கு கல்லறை சாலை பகுதி யில் 928 அடுக்குமாடி குடிசை மாற்று வாரிய குடி யிருப்புகளை உள்ளடக்கிய இடத்தில் 400க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் 30 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிக ளும் இல்லாமல் ஏழ்மை யின் காரணமாக வசித்து வந்தனர்.
தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இடித்து புதிதாக கட்டுவதற்கு முயற்சிக்கும் நிலையில் குடிசைகளை அந்த இடத்தில் அகற்ற வேண்டியுள்ளதால், அதற்கான கணக்கெடுப்பு தாமதமாக நடைபெறுவ தால் பொதுமக்கள் மத்தி யில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் தலையிட்டு முறையாக கணக் கிட்டு அந்த குடியிருப்பு வாசி களுக்கு அருகாமையில் அடுக்குமாடி வீடு கட்டித் தருமாறு கேட்டுக் கொள்கி றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.