districts

மர்ம காய்ச்சலுக்கு 8-ம் வகுப்பு மாணவி பலி

சென்னை,அக்.2-  மதுரவாயல் வேல் நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார்- சுஜிதா தம்பதியின் மூத்த மகள் பூஜா (வயது 13). விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதை யடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனு மதிக்கப்பட்ட பூஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி பூஜா  உயி ரிழந்தார். சரியான முறை யில் சிகிச்சை அளிக்கப்பட வில்லை என்று அவ ரது பெற்றோர் குற்றம் சாட்டி இதைத் தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் சுகா தார நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.