விழுப்புரம்,மே 28-
14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு மேற்கொண்டு வரும் நடைப்பயணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (மே 28) விழுப்புரம் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து மே 20ஆம் தேதி எம். தனலட்சுமி தலைமையில் புறப்பட்ட பயணக்குழு செங்கற்பட்டு மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (மே28) விழுப்புரம் மாவட்டம் வந்தடைந்தனர்,
மாவட்ட எல்லையான திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன் தலை மையில் வரவேற்றனர். அங்கு சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உரை யாற்றினார். தொடர்ந்து திண்டிவனம் பேருந்து நிலை யத்திற்கு பயணக்குழு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு கூட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலை வர் ஆர்.தாண்டவராயன், திண்டிவனம் வட்டச் செயலாளர் டி.ராமதாஸ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே. அறிவழகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.