ஒன்றிய பாஜக அரசின் விவசாயி விரோத பட்ஜெட்டைக் கண்டித்து சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா மணபூண்டியிலிருந்து அரகண்டநல்லூர் வரை நடை பயணம் நடைபெற்றது. சங்கத் தலைவர்கள் எம்.செல்வராஜ், எம்.ராமலிங்கம், வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வி.நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைச் செயலாளர் டி.டெய்சி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பரசுராமன், சத்தியநாராயணன், எம்.பி.ராமச்சந்திரன், சி.ஞானசேகரன், கே.சாமிநாதன், ப.சக்திவேல், செ.ஏகலைவன், பி.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.