அரசுப் போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-ஆவது ஒப்பந்த பேச்சுவார்த்தை ஓராண்டு காலதாம தமாக செவ்வாயன்று (ஆக.27) குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் தொடங்கியது.
போக்குவரத்துத்துறை செயலா ளர் பனீந்தர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், சிஐடியு, தொமுச உள்ளிட்ட 84 தொழிற்சங்கங்க ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கடந்த பேச்சுவார்த்தையில் 64 சங்கங்கள் பங்கேற்ற நிலையில் இந்த
பேச்சுவார்த்தையில் 84 சங்கங்கள் பங்கேற்றன. அதை முறைப்படுத்த வேண்டும் என்று சிஐடியு, தொமுச உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயி னார், “சங்கங்களை முறைப்படுத்து வது குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது” என்றார். “அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தேதியை நிர்ணயிக்க வேண்டும்.
இதில், 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கா மல் உள்ள ஓய்வூதியர்கள் பிரச்ச னை, பணி ஓய்வு பெற்று 20 மாதமாக பணப்பலன் கிடைக்காத தொழிலா ளர்களின் பிரச்சனை, 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களின் ஓய்வூதிய பிரச்சனை ஆகியவற்றை விவாதிக்க கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் வலியுறுத்தினோம். பேச்சு வார்த்தைக்கான தேதியை அரசுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக துறைச் செயலாளர் தெரிவித்தார்” என்றும் அவர் கூறினார்.
தொமுச பொருளாளர் கி. நடராசன் கூறுகையில், “கூட்டமைப்பு சங்கங் களின் உணர்வுகளை பிரதிபலித்து நல்ல ஒப்பந்தத்தை உருவாக்கு வோம்” என்றார்.