districts

img

கட்டுமான தொழிலாளி குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி: சிஐடியு வழங்கியது

சென்னை, செப். 22 - விருகம்பாக்கம் பகுதி, அன்னை சத்யா நகரில் கட்டுமானப் பணியின் போது ஜி. வினோத் விபத்து ஏற்பட்டு அண்மை யில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்வு வெள்ளியன்று (செப்.20) சத்யா நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் அன்னை சத்யா நகர் கிளைச் செயலாளர் வி.மதுரைவீரன் தலைமை தாங்கினார். நல வாரியத்தில் இருந்து பெறப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ரூ.5ஆயிரம்  ஈமச்சடங்கு நிதியை தொழிலாளியின் தாயார் அலமேலுவிடம், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். நிதியை பெற்றுக் கொண்ட அலமேலு, தீக்கதிர் நாளிதழுக்கு ஆண்டு சந்தாவும், நிர்மல் பள்ளிக்கு ரூ.3 ஆயிரம் வளர்ச்சி நிதியும் வழங்கினார். இந்த நிகழ்வில் இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.நடராஜன், விருகம் பாக்கம் பகுதி தலைவர் ஏ.செல்வராஜ், பொரு ளாளர் எஸ்.லோகநாதன், துணைச் செயலாளர் டி.ஆறுமுகம், கிளைச் செயலாளர் எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர்.