districts

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட் ஜெட்டைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஏழை-எளிய மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட் ஜெட்டைக் கண்டித்து சிஐடியு சார்பில் கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.கே.மகேந்திரன், பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் மேற்கு ஒன்றியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர்  டி.எஸ்.மோகன், டி.ரகு ஆகியோர் பேசினர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு எம்.காசி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சக்திவேல், தாலுகா குழு உறுப்பினர்கள் ஜோதி, ஞானசேகரன், கேசவன் ஆகியோர் பேசினர்.


ஒன்றிய அரசின் பட்ஜெட்டையும்  மக்கள் நலத்திட்டங்களை  நிறைவேற்றாத  மாநில என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி திருக்கனூர் கே.ஆர்.பாளைத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.